திங்கள், 28 நவம்பர், 2011

மனிதனும் மதமும் : மனிதன்

   தோழர்களே! 'மனிதனும் மதமும்' என்ற தலைப்பில்  பேசுவதென்றால், முதலிலே இரண்டு சங்கதிகளை நாம் விளக்கிக் கொள்ளவேண்டும்.

   அவை என்ன என்றால்,
  ஒன்று மனிதன் என்றால் என்ன?
  இரண்டு மதம் என்றால் என்ன?

 அது இரண்டையும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தோமேயானால் இந்தப் பேச்சு நமக்கு நேரக்கேடாக போய்விடும்.
 
  மனிதன் என்பது, உலகிலுள்ள சீவராசிகள் போன்ற ஒரு சீவன் என்று பொதுவாகக் கருத்ப்பட்டாலும், மற்ற எல்லா சீவப்பிராணிகளிடமிருந்தும் பிரித்துத் தனிப்படுத்தி வைக்கப்பட்ட சீவன் மனிதன் என்பவன்! எப்படி என்றால், சீவப்பிராணிகள் எல்லாவற்றுள்ளும் மனிதனை மாத்திரம் பிரிக்கிறதென்பதற்கு என்ன அவசியம் என்று சிந்தித்தால் மற்ற எல்லாப் பிராணிகளையும் விட மனிதனுக்கு மாத்திரம் கொஞ்சம் அறிவுச் சிறப்பு இருக்கிறது. அதாவது மனிதனுக்கு மாத்திரம் அதிகம் என்று சொல்லத்தக்க வண்ணம் உள்ளது. அதாவது சிந்திக்கிற தன்மைடயில் சிந்தனைச் சக்தி சிறப்பாக உள்ளது. பகுத்தறிவு இருக்கிறது. மற்ற சீவப்பிராணிகளுக்கும் அறிவு படிப்படியாக இருக்கலாம். அது மனிதனை போன்று அவ்வளவு சிந்தித்து, மனிதனைப்போல சமுதாய வளைச்சிக்கு அல்லது தன்நனலத்துக்கு ஏற்ற வண்ணம் மாற்றி நடக்கக்கூடிய சக்தி மற்ற சீவன்களுக்கு இல்லை. எந்த சீவன், எவ்வளவு உயர்ந்த சீவனாயிருந்தாலும் அந்த சீவனுடைய அறிவு ஒரு நிலைபெற்ற நடத்தைகளாகத்தான் இருக்கும்.

மனிதனின் அறிவு மாறுதலுக்கேற்றது
   மனிதனுடைய அறிவு மாறுதலுக்கேற்றது. எவ்வளவு சக்தி வாய்ந்த, அவ்வளவு பலம் பொருந்திய சிங்கம், புலி, கரடியானாலும் யானை, எருமை, காண்ரடாமிருகமனாலும் அவைகள் வாழ்வில் ஆயிரம் வருடங்களாக பெரிதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அன்று எப்படி சாப்பிட்டதோ, அன்று எப்படி வாழ்ந்ததோ அதே மாதிரிதான் இன்றும்.

   மாற வேண்டும். தன்னுடைய சவுகரியங்களுக்கு வேண்டிய வசதிகள் பண்ணி, தன்னுடைய வாழ்வை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறா எண்ணமெல்லாம் அவைகளிடத்தில் இல்லை. நடத்துபவன் நடத்துவதுபோல்தான் இருக்க முடியும்.

பகுத்த்றிவு கொண்டு சிந்திப்பவனே மனிதன்
   மனிதனுக்கு அப்படி இல்லை. அவனுடைய அறிவின் சக்தி ஒவ்வொரு நாலளும் தன்னுடைய நலத்தைப் ப்ருக்க, தன்னை வளர்த்துக் கொள்ள தனக்கு வேண்டிய வசதிகளை செய்துகொள்ள, விடங்களை சிந்தித்து மிடிவு பண்ணினதை மறு படி சிந்தித்து மாற்றிக்கொள்ள வசதியான் ஆராய்ச்சி அறிவு மனிதனுக்கு உண்டு. ஆகவே, இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

   அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மனிதன் என்பவனையே மனிதனாக வைத்திகொண்டு இப்பொது நாம் பேசுவோம். மனிதன் பகுத்தறிவைக் கொண்டு சிந்த்த்து, ஆராய்ந்து, நல்ல முடிவுக்கு வந்து, நல்லவகைகளை ஏற்றுக்கொள்ள கருத்துடையவன்.

0 comments:

கருத்துரையிடுக

நண்பர்களுடன் பகிரவும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More